உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 16, 2011

அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி படிப்பில் சேருவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

சிதம்பரம்:

        அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி படிப்பில் சேருவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் தொலைதூரக் கல்வி படிப்பில் சேருவதற்கு சலுகை கட்டணம் மற்றும் தற்போதைய மாணவர்கள் கூடுதல் படிப்பில் சேருவதற்கான கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களும் அமலில் உள்ளது.பொதுமக்களின் வசதிக்காக தொலைதூரக் கல்வியில் சேருவதற்கான தேதி நவம்பர் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

          படிப்புகள் பற்றி முழு விவரங்களையும் இந்தியா முழுமையும் உள்ள படிப்பு மற்றும் தகவல் மையங்கள், 

04144-238610, 238043, 238044, 238045, 238046, 238047 தொலைபேசி, www.annamalaiuniversity.ac.in

என்ற இணையதளம்

dde@annamalaiuniversity.ac.in
 

 என்ற மின்னஞ்சல், 

தொலைத்தூரக் கல்வி இயக்ககம், 
அண்ணாமலை நகர் - 608 002 

ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior