உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 16, 2011

சிதம்பரத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றது

சிதம்பரம்:
 
          திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு வந்தது. இன்று காலை 6.25 மணிக்கு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வரவேண்டிய இந்த ரெயில் 6.55 மணிக்கு தாமதமாக வந்தது. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது ரெயில் என்ஜினில் இருந்து பெரும் புகை கிளம்பியது.

            ரெயில் என்ஜின் டிரைவர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பார்த்தபோது என்ஜின் வால்வு பகுதியில் பழுதாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரெயிலை புதுசத்திரத்தில் நிறுத்தி அதில் இருந்த என்ஜினை கொண்டு வந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொறுத்தினர். இதைத்தொடர்ந்து 7.40 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சுமார் 2 மணி நேரம் ரெயில் என்ஜின் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior