உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 08, 2011

சிதம்பரத்தில் முதலை கடித்து பெண் மருத்துவமனையில் அனுமதி


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/77f5907a-91cf-44cb-bf49-4781c757b730_S_secvpf.gif
 
சிதம்பரம்

           சிதம்பரத்தை அடுத்த என்.பூலாமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 60). இவர் தனது ஊருக்கு அருகே உள்ள உப்பனாறுக்கு சென்றார். ஆற்றில் துணிகளை துவைத்து கொண்டிருந்தபோது நீருக்குள் மறைந்திருந்த முதலை கிருஷ்ணவேணியின் காலை கவ்வி கடித்து குதறியது.

            விபரீதத்தை உணர்ந்த அவர் பயந்து அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் முழு மூச்சுடன் போராடி முதலையின் பிடியில் இருந்து கிருஷ்ணவேணியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior