உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 28, 2011

திட்டக்குடியில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/9cbb7612-2811-48cc-82b7-e893e68d8956_S_secvpf.gif
திட்டக்குடி:

              திட்டக்குடியை அடுத்துள்ள வாகையூர் கிராமத்தில் மேலவீதியில் சுமார் 60 வீடுகள் உள்ளன. மின்வாரியம் தெரு மிளக்கு வசதிகளை செய்துள்ளது. அனைத்து வீடுகளும் மின் இணைப்பு வசதி பெற்றுள்ளன. இந்த தெருவை தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்கூல்வேன் தனியார் வேன்கள் கார்கள் அதிகமாக இயங்கும் முக்கியதெருவாகும்.

             இந்த தெருவில் 5 ஆண்டுகளுக்கு முன் மின் வாரிய கம்பம் ஒன்று மோசமாக பலவீனமடைந்து முறிந்து விழும் நிலையில் இருந்தது இதைபார்த்த மின் வாரிய அலுவலர்கள் அந்த கம்பத்தின் கீழ்ப்பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு ஜல்லியும் சிமென்டையும் கலந்து போட்டு பலவீனம் அடைந்தபகுதியை மட்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அந்த கம்பத்தில் 400 வோல்ட்ஸ் அபாயம் என சிவப்பால் எழுதப்பட்ட ஒரு போர்டை வைத்துள்ளனர். 
            ஆனால் 5ஆண்டுகளாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை மின் கம்பமும் சிறிதளவு சாய்ந்தே காணப்படுகிறது. தினமும் அவ்வழியாக செல்வோர் பயந்து பயந்துதான் செல்லுகின்றனர். அந்த மின் கம்பத்தை எடுத்து விட்டு நல்ல உறுதியான மின் கம்பத்தை போட்டால் இந்த தெருமக்களின் அச்சம் நீங்கும் என்பதுதான் இப்பகுதி மக்களின் ஒருமித்த கருத்து.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior