உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 05, 2011

சிதம்பரத்தில் அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு 2 லட்சத்திற்கான கல்வி உதவி தொகை வழங்கும் விழா

சிதம்பரம்:

            சிதம்பரத்தில் அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா நடந்தது.

               நந்தனார் பெண்கள் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சச்சிதானந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் முன்னிலை வகித்தார். அனுக்கிரகா கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் மணிரத்தினம், டேபிள் டென்னிஸ் போட்டியில் மாநில அளவில் பங்கேற்க உள்ள மாணவிகள் தேன்குழலி, பாண்டிச்செல்வி ஆகியோருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் உட்பட 2 லட்சத்திற்கான கல்வி உதவித் தொகை வழங்கினார்.
 

                  டாக்டர் சங்கர், சுவாமி சகஜானந்தா சமூக மேம்பாட்டு குழு செயலர் இளங்கோ, ஓய்வு பெற்ற ஆசிரியர் மணிவேல், கிள்ளை பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி, அறக்கட்டளை செயலர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆண்கள் பள்ளியிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior