உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 20, 2011

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

கடலூர் :

          கடலூர் அண்ணா விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி அமைக்க அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர். 

            தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் விடுதி கட்ட 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடலூர் அண்ணாவிளையாட்டு அரங்கில் தெற்கு பகுதியில் கூடைப்பந்து அரங்கின் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து அளந்தனர். பின்னர் அதிகாரிகள் இது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொறியாளர் விஜயகுமார், தலைமை அலுவலக மேலாளர் சாந்தன், மண்டல முதுநிலை மேலாளர் துரைசிங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் உடனிருந்தனர்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior