உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 21, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூரில் ஆர்ப்பாட்டம்

 
 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/b316b2c5-6651-4209-9469-fb62c17b59a8_S_secvpf.gif
 
கடலூர்:

     முல்லை பெரியாறு அணை பிரச்சினையால் கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் கேரள நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திங்கட்கிழமை  கடலூர் லாரன்ஸ் சாலையில் கேரள மாநிலத்திற்கு சொந்தமான நகைக்கடையை சிலர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே அந்த பகுதியில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  

         போலீஸ் பாதுகாப்பையும் மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அறிவுடைநம்பி தலைமையில் சுமார் 50 பேர் அந்த நகை கடையை முற்றுகையிட முயற்சித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர்.  அந்த நேரத்தில், நாம் தமிழர் கட்சியினர் சுமார் 30 பேர் அந்த நகை கடையை முற்றுகையிட கோஷம் போட்டுக்கொண்டே ஓடிவந்தனர். சுதாரித்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகைக்கடை முற்றுகைக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior