உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 07, 2011

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

கடலூர் : 

        கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை பதிவாளர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

         தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் கடலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வேலை வாய்ப்பு பெறக்கூடிய கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடு ஆகிய மூன்று பட்டயப் பயிற்சிககள் நடத்தப்பட்டு வருகிறது.

              ஒன்பது மாத இப்பயிற்சி வகுப்பு வரும் ஜனவரி 18ம் தேதி அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் துவங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.பயிற்சிக் கட்டணம் 6,000 ரூபாய். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உதவித் தொகை பெறலாம். மேலும் விவரம் வேண்டுவோர் தங்கள் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.










 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior