உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 09, 2011

உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்


          உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் 
 
               உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற அடியுரம் இடுவதுடன் கூடுதலாக இலைவழியே 2 சதவிகித டி.ஏ.பி. உரத்தினைக் கலந்து தெளிப்பது ஒரு செலவு குறைந்த எளிய, அதிக பலன் தரும் தொழில்நுட்பமாகும்.  இந்த டி.ஏ.பி. தெளிப்பை இரண்டு முறை செய்வது மிகவும் நல்லது. முதல் முறை உளுந்து விதைப்பு செய்த 25-ம் நாள் அல்லது பூக்கும் தருணமாகும்.
 
 
               முதல் முறை தெளித்த 15 நாள் கழித்து இரண்டாம் முறை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தெளிப்பு செய்யத் தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை தெளிப்பதற்கு முந்தைய நாள் 15 லிட்டர் நல்ல நீரில் ஊற வைக்க வேண்டும்.  மறுநாள் ஊற வைத்த நீரில் தெளிவினை மட்டும் நன்றாக வடிகட்டி 185 லிட்டர் நல்ல நீரில் கலந்து ஒரு டேங்க் தெளிக்க 2 மில்லி டீபால் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.  டி.ஏ.பி. அளவை பரிந்துரைத்ததை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெளிக்கக் கூடாது.  மேலும் அதில் நீரின் அளவு அதிகமானால் செடிகள் மஞ்சளாகவும், குறைந்தால் செடிகள் எரிந்தது போன்றும் காணப்படும். பூச்சி மற்றும் நோய் மருந்துகளுடன் கலந்து தெளிக்கக் கூடாது. இதனால் செடிகளில் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெரும்பாலான பூக்கள் பிஞ்சமாக மாறும்.  டி.ஏ.பி. தெளிப்பதால் காய் பிடிப்பு அதிகமாவதோடு காய்களில் உள்ள பருப்புகள் அனைத்தும் நன்றாக முற்றுவதுடன் திரட்சியாகவும், அதிக புரதச்சத்துடனும் எடை அதிகமாகவும் கிடைக்கும். இதனால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior