உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 26, 2011

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடலூர் : 

               ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் சிகிச்சை மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             ஒரத்தூர், நடுவீரப்பட்டு, ஸ்ரீமுஷ்ணம், ஆயங்குடி, மருங்கூர், பெண்ணாடம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் பல் சிகிச்சை மையங்களில் பல் டாக்டர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதில் வாரத்திற்கு 6 நாள் பணி வழங்கப்படும். இவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரத்திற்கு முறையே 500 மற்றும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பல் மருத்துவத்தில் பட்டப் படிப்பும், உதவியாளர் பணிக்கு பல் மருத்துவ பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூரில் இயங்கி வரும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையில் இயங்கும் மாவட்ட சுகாதார குழும உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior