உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 19, 2012

கடலூர் மாவட்ட தானே புயல் சேதம் பற்றிய குறும்படம் தயாரிப்பு

     கடலூர் தானே புயல் பாதிப்பு பற்றிய குறும்படத்தை தயாரித்து இருப்பதாக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.


இதுகுறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கூறியது

           கடலூர், விழுப்புரம் பகுதியில்  தானே' புயலால் ஏற்பட்டது பாதிப்பு அல்ல, பேரழிவு. அந்த பகுதி மக்களுடன் 3 நாட்கள் தங்கியிருந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சேகரித்து வந்திருக்கிறேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், விவசாய அழிவுகளை குறும்படமாக படம் பிடித்து வந்திருக்கிறேன்.

            எல்லாவற்றுக்கும் சாட்சியாக இந்த படம் அமையும். அரசியல்வாதிகளுக்கும், தமிழக அரசுக்கும் பல கேள்விகளை எழுப்பும் விதமாக இந்த படம் அமையும். கடலூர் பகுதியில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் குறித்து முதல் அமைச்சரிடம் அதிகாரிகள் சரிவர சொல்லவில்லை என்பது தான் உண்மை.

குடிநீர், பால், மின்சாரம் எதுவும் அந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. ரேஷன் பொருட்கள் கடையும் இல்லை. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் 100 சதவீதம் திறந்து உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

              கடலூர், விழுப்புரம் பகுதியில் சிறப்பு செயலாக்கத்துறையை அமைத்து, இந்த பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறையும் இதை செயல்படுத்தி, மக்களின் நிலையை கண்காணிக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் உயரும் வரை சலுகை விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior