உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 05, 2012

கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி 16 சாரணர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவிக்கும் விழா

கடலூர் :

        கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்த விழாவில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு 16 சாரண மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கிப் பாராட்டினார்.
 
       டில்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதி நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2010-11ம் ஆண்டிற்கான சாரணர்களுக்கான விருதுகளை வழங்கினார். அதில் கடலூர் மாவட்டத்திற்கு 25 சாரண மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டதில் இந்திய அளவில் அதிகளவில் 16 ஜனாதிபதி விருதுகளை கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியின் 16 சாரண மாணவர்கள் பெற்றனர். இவ்விருதுகளை சாரண மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கும் விழா செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் ஆக்னல் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு 16 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில் செயின்ட் ஜோசப் பாலர் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், மாவட்ட சாரண செயலர் இளையகுமார், அமைப்பு ஆணையர் வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior