உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 09, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் உலக மகளிர் தின விழா

கடலூர்:

       கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் கோமதி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகாசியை சேர்ந்த வணிக மேலாளர் சசிகலா " சிகரத்தை நோக்கி பெண்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

        விழாவில் கல்லூரி அனைத்துத் துறை மாணவிகள், பேராசிரியைகள் பங்கேற்றனர்.பிற்பகல் 2 மணிக்கு நடந்த நுகர்வோர் விழாவிற்கு நெய்வேலி நுகர்வோர் பாதுகாப்புச் சங்க தலைவர் முருகவேள், துணைத் தலைவர் செந்தில் பங்கேற்று பேசினர்.ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முனைவர் குழந்தை தெரசா பாத்திமா நன்றி கூறினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior