உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 27, 2012

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் வினாடி வினா


காட்டுமன்னார்கோவில்:

   காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு 4 நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நான்காம் நாள் கருத்தரங்கில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கை கல்லூரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி கம்யூட்டர் துறை பேராசிரியர் ஜெயராஜ், கியூமேக்ஸ் மேலாளர் கிருஷ்ணகுமார், சென்னை குரூப் ஆப் கம்பெனி டாக்டர் லதா பார்த்திபன் உட்பட பலர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். வினாடி வினாவில் பேராசிரியர் நக்கீரன் நடுவராக இருந்தார். மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior