உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 19, 2012

கடலூரில் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிக்கு கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி

கடலூர் :


சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடியில் நடந்தது. கடலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு 2011 பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடி, கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. பயிற்சியில் முதன்மை பயிற்றுனர்கள் உதவி செயற் பொறியாளர் செல்வக்குமரன் (சுனாமி), உதவிப் பொறியாளர் நாராயணன் பயிற்சி அளித்தனர். மேலும் திட்ட இயக்குனர் மகேந்திரன் பயிற்சி நடைபெறுவதை பார்வையிட்டு பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் செய்திருந்தனர்.
















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior