உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 19, 2012

பண்ருட்டியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

பண்ருட்டி:

 பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்த சிவா (32) என்பவரை பண்ருட்டி போலீசார்  புதன்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைஅதிக அளவில் நடப்பதாக போலீஸôருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அம்பேத்கர் நகர் ரயில்வே பீட்டர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த சிவா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior