உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 11, 2012

திட்டக்குடி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன் மீது நிலப்பறிப்பு புகார்

விருத்தாசலம்:

                   திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ மீது நிலப் பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.


         விருத்தாசலத்தை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிலம் பெண்ணாடம் ரயில்வே கேட் அருகில் பெ.பொன்னேரி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகிறாராம்.



இதுதொடர்பாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பகலவனிடம் விவசாயி கொடுத்த புகார் மனு விவரம்: 

                        பெ.பொன்னேரி கிராமத்தில் 68 சென்ட் இடத்தின் ஒரு பகுதியை தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன், அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். எனது போர்குழாயை மூடி, அதன் மேல் கொட்டகைக் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் வருமானம் இன்றி உள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

               

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior