உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 09, 2012

கடலூரில் சுனாமியில் பெற்றோரை இழந்த இரு பெண்களுக்கு ரூ.13.68 லட்சம் நிதியுதவி

கடலூர்:

சுனாமி பேரலையால் பெற்றோரை இழந்த இரு பெண்களுக்கு திருமண வைப்பீடு தொகை ரூ.13.68 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திங்கள்கிழமை வழங்கினார் . 26.12.2004-ம் ஆண்டு கடலூரில் சுனாமி பேரலை தாக்கியதில் பி.வேதநாயகி, எஸ்.சுகந்தி ஆகியோர் பெற்றோரை இழந்தனர். அரசால் துவங்கப்பட்ட சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் ஜனவரி 2005-ம் ஆண்டு வேதநாயகி (6-ம் வகுப்பும்), எஸ்.சுகந்தி (பிளஸ் 2) படிக்கும்போது காப்பகத்தில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட தருணத்தில் பி.வேதநாயகிக்கு ரூ.4,66,666-ம், எஸ்.சுகந்திக்கு ரூ.4 லட்சமும் தமிழக அரசு மூலம் சுனாமி நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

இத்தொகை அவர்களது திருமணத்துக்கு பின்னர் வட்டியுடன் சேர்த்து வழங்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த ஜமாபந்தியின்போது வேதநாயகிக்கு ரூ.7,15,051-ம், சுகந்திக்கு ரூ.6,53,397-ம் ஆக மொத்தம் ரூ.13.68 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ வழங்கினார். அப்போது சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி உடனிருந்தார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior