உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 27, 2012

கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

.விருத்தாசலம்:

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கலந்தாய்வு துவங்கியது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நேற்று முன் தினம் முதல் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், இலங்கை அகதிகள், விளையாட்டு  பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 34 பேர் தேர்வு  செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

நேற்று காலை 9 மணிக்குத் துவங்கிய பி.ஏ., ஆங்கிலம் கலந்தாய்வில் 140 பேர் பங்கேற்றனர். இதில் காலை நேர வகுப்பிற்கு 70 பேரும், மாலை நேர வகுப்பிற்கு  70 பேரும் சேர்க்கப்பட்டனர். இன்று27ம் தேதி பி.எஸ்சி., கணிதம், கம்பியூட்டர் சயின்ஸ், 28ம் தேதி பி.எஸ்சி., இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து  ஜூலை 2ம் தேதி பி.காம்., பி.ஏ., தமிழ், 3ம் தேதி பி.ஏ.,வரலாறு, பி.எஸ்சி.,  தாவரவியல் (இந்த கல்வியாண்டு முதல் இப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது) ஆகிய  பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் 10.30 மணி வரைகலந்தாய்வு நடக்கிறது.
...

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior