உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 28, 2012

தமிழக அரசின் மாணவர்களுக்கான சலுகைகள் தகவல் பலகையில் எழுதும் பணி


பண்ருட்டி:


    பள்ளிகளில் அரசின் திட்டங்கள் குறித்து விளம்பரப் பலகைகளில் எழுதும் பணி நடந்தது.தமிழக அரசு மாணவி, மாணவிகள் படிப்பறிவு அதிகப்படுத்த அரசு பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசின் சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

            இதில் விலையில்லா பாட நூல்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, புத்தகப்பை, சீருடை, மதிய உணவு திட்டம், காலணி, இலவச பஸ் பாஸ், பிளஸ் 1 மாணவர்களுக்கு மிதிவண்டி, 1ம் வகுப்பு முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு வண்ண பென்சில்கள், 6ம் வகுப்புகளுக்கு கணித உபகரணப் பெட்டி, விலையில்லா புவியியல் வரைபட நூல்கள். 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 இடைநின்றல் குறைப்பதற்கு சிறப்பு ஊக்கத்தொகை, வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை இழந்தவர் குடும்ப குழந்தைகளுக்கு நிதியுதவி என அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதனைபள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தகவல் பலகை எழுதும் பணி நடந்தது

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior