உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 24, 2012

சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைகைக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம்

சிதம்பரம் :

சிதம்பரம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடக்கிறது. சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல்லூரி 2012-13ம் கல்வியாண்டுக்கான  மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (24ம் தேதி)  கல்லூரி நூலகத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் கலந்தாய்வுக் கூட்டத்தில் விண்ணப்பித்து இடம் கிடைக்காமல் பி.சி., எம்.பி.சி., எஸ்.டி., எஸ்.சி பிரிவைச் சேர்ந்த மாணவ,  மாணவியர்கள் பங்கேற்கலாம். மற்ற பிரிவினர்களில் பாடப் பகுதி 3ல் 800க்கு  375க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் இடங்கள்  இருந்தால் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும். இத்தகவலை கல்லூரி முதல்வர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior