உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 14, 2012

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் கருத்தரங்கம் துவக்கம்

கிள்ளை:

          சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.கல்லூரி முதல்வர் வாசுதேவன் தலைமை தாங்கினார். வேதியியல் துறைத் தலைவர் வணங்காமுடி வரவேற்றார். நேற்று நடந்த முதல்நாள் கருத்தரங்கை மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் துவக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சுவாமிநாதன் வேதியியல் ஆராய்ச்சித்துறையில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார்.

            கருத்தரங்கம் புத்தகத்தை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பத்பநாபன் வெளியிட்டார். கருத்தரங்கில் பேராசிரியர்கள் சேகர், சாந்தி, பழனிவேல், தேவநாதன், சண்முகன், பிரபா, சுகிலா, டார்லின்குயின், பாபுஜான், மணிவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.பேராசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார். இன்று ஆய்வு கட்டுரை சமர்பித்தல் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior