உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என கோரி சாலை மறியல்

விருத்தாசலம்: 

விருத்தாசலத்தில் உணவு பாத்திரத்துடன் சாலையில் அமர்ந்து அரசு கல்லூரி ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி ரோட் டில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலையில் விடுதியில் சமைத்த உணவை பாத்திரத்துடன் எடுத்து வந்த மாணவர்கள் விருத்தாசலம்- ஆலடி ரோட்டில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் சையத் ஜாபர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 10 நாட்களாக விடுதியில் உணவு சரிவர வழங்கப்படவில்லை என்றும், சமைத்த உணவுகளில் பூச்சி இருந்ததாகவும், இது குறித்து வார்டனிடம் கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை என்றும், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்றும் மாணவர் கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் சையத் ஜாபர் இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றன

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior