உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அய்யப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அய்யப்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 06, 2010

நலத்திட்ட உதவிகள் வழங்க கடலூர் நகர தி.மு.க., முடிவு

கடலூர் : 

              கடலூர் நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

                       கடலூர் நகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.  நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலாளர் தங்கராசு, முன்னாள் சேர்மன் ராஜேந் திரன்,  பழனி, நகர துணை அமைப்பாளர் வசந்தா, அண்ணாதுரை, தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் கோவலன், ரவிச் சந்திரன், ஆதிபெருமாள், ராமு, கோவிந்தசாமி உள் பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவில் திரளாக பங்கேற்பது, துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நகரில் உள்ள 45 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

திங்கள், மார்ச் 01, 2010

டி.இ.சி., மாத்திரை வழங்கும் பணி : எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார்


கடலூர் : 

                கடலூர் அடுத்த கோண் டூர் ஊராட்சியில் யானைக் கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணியை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கிவைத்தார்.
             மாவட்டத்தில் யானைக் கால் நோயை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறை சார்பில் 22 லட்சம் பேருக்கு டி.இ.சி., மற்றும் அல்பண்டசோல் மாத்திரைகள் வழங்கும் பணி நேற்று நடந்தது. கடலூர் அடுத்த கோண்டூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுஜாதா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ரூபாதேவி வரவேற் றார். மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ளும் முறையை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மீரா விளக்கினார்.
            
              யானைக்கால் நோய் ஒழிப்பு மாத்திரையை வீடு, வீடாக சென்று வழங்கிட களப்பணியாளர்களிடம் மாத்திரைகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுரேஷ், சுஜாதா, சுகாதார ஆய் வாளர் கோவிந்தன், ஒன் றிய கவுன்சிலர் மணிமொழி  பங்கேற்றனர்.

மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் டாக்டர் பாஸ்கரன் கூறுகையில்:, 

                  டி.இ.சி., மாத்திரைகள் 2 முதல் 5 வயதினர் ஒன்றும், 6 முதல் 14 வயதினர் இரண்டும், 15 முதல் 60  வயதினர் மூன்று உட்கொள்ள வேண்டும். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்குமேற்பட்டவர், இருதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இந்த மாத்திரையை சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றில் உட் கொள்ளக்கூடாது. மாத்திரைகளை சாப்பிட்டால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஒரு சிலருக்கு காய்ச்சல், அரிப்பு, தடிப்பு, வாந்தி போன்றவை ஏற்பட்டால் அது அவர்களின் உடலில் உள்ள உள்ள யானைக்கால் நோய் புழுக்கள் அழிக்கப் படுவதன் விளைவேயின்றி அச்சப்படதேவையில்லை என்றார்.

Read more »

வியாழன், பிப்ரவரி 25, 2010

பெரியார் அரசு கல்லூரியில் தமிழ்ச் செம்மொழி விழா

கடலூர் : 

                     கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அண்ணா நூற்றாண்டு புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா மற்றும் தமிழ்ச்செம்மொழி விழா  நடந்தது.
 
                       கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் அண்ணா நூற்றாண்டு புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா மற்றும் தமிழ்ச்செம்மொழி விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் தமிழாழி பொற்கைவேந்தன் வரவேற்றார். கடலூர் நகராட்சி துணை சேர்மன் தாமரைச் செல்வன், முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., அய்யப்பன் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். விழாவில் முனைவர் கருணாகரன், பேராசிரியர் நடராஜன், ரெஜினா ராஜ்குமார், கவுன்சிலர்கள் கோவலன், கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சண்முகம் உள்ளபட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் அர்த்தநாரி நன்றி கூறினார்.

Read more »

புதன், பிப்ரவரி 24, 2010

நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கடலூர்: 

               சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் முதுநகர் நகராட்சி நடுநிலைப் பள் ளிக்கு தண்ணீர் தூய் மைப்படுத்தும் இயந்திரம் வழங்கப்பட்டது. கடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார் பில் கடலூர் முதுநகர் சுண்ணாம்புகாரத் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் தூய்மைப்படுத்தும் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். சேர்மன் தங்கராசு, கமிஷனர் குமார், கவுன்சிலர் செந்தில், உதவி ஆளு னர் தாயுமானவன், பிறையோன், ராசன், உதயகுமார், தலைமை ஆசிரியர் குமாரவேல், ஆசிரியர்கள் புஷ்பகுளோரியா, பாரதி, உஷாராணி, மங்கலம், லதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior