உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாநகராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மே 30, 2011

கடலூர் பாதிரிக்குப்பத்தில் ஜூன்-1 ம் தேதி இலவச அரிசி திட்டம் தொடக்க விழா : அமைச்சர் எம்.சி.சம்பத்


கடலூர்:
           அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பேட்டி:

       தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான இந்த அரசு வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் ஏழை, எளிய குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடக்கிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. கடலூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நடை பாதைகள் சீரமைக்கப்படும்.

               கடலூர் நகராட்சி பகுதியில் காலியாக உள்ள பொது இடங்களை கண்டறிந்து அங்கு அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது போல கடலூர் சில்வர் பீச் அழகுபடுத்தப்படும், படகு குழாம் சீரமைக்கப்படும். அடுத்த ஆண்டு கோடை விழா கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

              இதில் நகர செயலாளர் குமார் என்கிற குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, தொகுதி செயலாளர் சி.கே.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், விவசாயஅணி காசிநாதன், பேரவை இணை செயலாளர் ஏ.ஜி.மதியழகன், பொருளாளர் ஆர்.வி. ஆறுமுகம், மகளிர் அணி நாகரத்தினம், பேச்சாளர் புலிசை சந்திரகாசன், வக்கீல் மாசிலாமணி, கவுன்சிலர் கந்தன், முன்னாள் நகர பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் வீரமணி, தே.மு.தி.க. நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Read more »

வெள்ளி, நவம்பர் 26, 2010

கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த சேர்மன் மனு

கானல் நீராகிப் போன கனவுகள் 

கடலூர் : 

             கடலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என சேர்மன் தங்கராசு கூறியுள்ளார். 

இதுகுறித்து நான்காவது நிதிக்குழுத் தலைவரிடம் கடலூர் நகராட்சி சேர்மன் தங்கராசு அளித்துள்ள மனு: 

                    சிறப்பு நிலை நகராட்சியான கடலூர் நகராட்சியை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து, இந்நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம், காரைக்காடு, குடிகாடு, பச்சையாங்குப்பம், சான்றோர் பாளையம், கண்ணாரப்பேட்டை, சுத்துக்குளம், கரையேறவிட்டகுப்பம், அரிசி பெரியாங்குப்பம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, கோண்டூர், கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி ஆகிய பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும்.

                   கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் துணை பஸ் நிலையம் அமைக்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகிய பகுதிகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கரைப்பகுதியை பலப்படுத்த வேண்டும். கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தேவனாம்பட்டினம் கடற்கரையை சுற்றுலா தளமாக அங்கீரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior