உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 30, 2011

கடலூர் பாதிரிக்குப்பத்தில் ஜூன்-1 ம் தேதி இலவச அரிசி திட்டம் தொடக்க விழா : அமைச்சர் எம்.சி.சம்பத்


கடலூர்:
           அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், வருவாய் அதிகாரி ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பேட்டி:

       தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான இந்த அரசு வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் ஏழை, எளிய குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் இதற்கான தொடக்க விழா கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடக்கிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. கடலூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நடை பாதைகள் சீரமைக்கப்படும்.

               கடலூர் நகராட்சி பகுதியில் காலியாக உள்ள பொது இடங்களை கண்டறிந்து அங்கு அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது போல கடலூர் சில்வர் பீச் அழகுபடுத்தப்படும், படகு குழாம் சீரமைக்கப்படும். அடுத்த ஆண்டு கோடை விழா கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

              இதில் நகர செயலாளர் குமார் என்கிற குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, தொகுதி செயலாளர் சி.கே.சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், விவசாயஅணி காசிநாதன், பேரவை இணை செயலாளர் ஏ.ஜி.மதியழகன், பொருளாளர் ஆர்.வி. ஆறுமுகம், மகளிர் அணி நாகரத்தினம், பேச்சாளர் புலிசை சந்திரகாசன், வக்கீல் மாசிலாமணி, கவுன்சிலர் கந்தன், முன்னாள் நகர பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் வீரமணி, தே.மு.தி.க. நகர செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior