உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த சேர்மன் மனு

கானல் நீராகிப் போன கனவுகள் 

கடலூர் : 

             கடலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என சேர்மன் தங்கராசு கூறியுள்ளார். 

இதுகுறித்து நான்காவது நிதிக்குழுத் தலைவரிடம் கடலூர் நகராட்சி சேர்மன் தங்கராசு அளித்துள்ள மனு: 

                    சிறப்பு நிலை நகராட்சியான கடலூர் நகராட்சியை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து, இந்நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். செம்மங்குப்பம், சங்கொலிக்குப்பம், காரைக்காடு, குடிகாடு, பச்சையாங்குப்பம், சான்றோர் பாளையம், கண்ணாரப்பேட்டை, சுத்துக்குளம், கரையேறவிட்டகுப்பம், அரிசி பெரியாங்குப்பம், பாதிரிக்குப்பம், திருவந்திபுரம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, கோண்டூர், கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி ஆகிய பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும்.

                   கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் துணை பஸ் நிலையம் அமைக்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகிய பகுதிகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கரைப்பகுதியை பலப்படுத்த வேண்டும். கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். தேவனாம்பட்டினம் கடற்கரையை சுற்றுலா தளமாக அங்கீரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior