உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூன் 10, 2011

கடலூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஊர்வலம்


கடலூரில் வியாழக்கிழமை நடந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஊர்வலம்.
கடலூர்:

                  கடலூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தினர் கடலூரில் வியாழக்கிழமை ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 

             ஆறுகளில் மணல் எடுப்பது தொடர்பாக மாவட்டம் முழுவதும் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை, நிபந்தனையின்றி வாபஸ்பெற வேண்டும். மாட்டு வண்டித் தொழிலாளர் ஒருவரை தாக்கிய, கடலூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவந்திபுரம், சி.என்.பாளையம், திருக்கண்டேஸ்வரம். பலாப்பட்டு பகுதிகளில் அதிகாரப் பூர்வமான மணல் குவாரிகளை அமைக்க வேண்டும், மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளுக்காக இந்த ஊர்வலம் நடந்தது.  

             திருப்பாபுலியூர் உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டுவண்டித் தொழிலாளர் சங்க கடலூர் நகரச் செயலாளர் பி.பரணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.ரங்கநாதன், ஜெய்சங்கர், சுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், துணைத் தலைவர் ஆளவந்தார், மாட்டுவண்டித் தொழிலாளர் சங்க சிறப்புத் தலைவர் ஆர்.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் ஆர்.என்.சுப்பிரமணியன், செயலாளர் வி.திருமுருகன், பொருளாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.




Read more »

செவ்வாய், ஜூன் 29, 2010

மணல் அள்ளும் கட்டணத்தை குறைக்க ​வேண்டும்: மாட்டுவண்டி தொழிலாளர் கோரிக்கை

கடலூர்:

           மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ளும் கட்டணம் ரூ.47 என்று இருப்பதை ரூ.20 ஆகக் குறைக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.​ ​

அண்மையில் நடந்த இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ ​

                  ​விபத்துக்கள் நேரிட்டால் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு நலவாரிய விபத்துக் காப்பீடு திட்டத்தில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.​ மாட்டுத் தீவன விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ ​காவல் துறையை வைத்து மாட்டு வண்டித் தொழிலை ஒடுக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்.​ இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14 அன்று சி.ஐ.டி.யூ.​ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.​ ​இக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.​ மாவட்டச் செயலர் வி.திருமுருகன் மற்றும் நிர்வாகிகள் டி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior