உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

மணல் அள்ளும் கட்டணத்தை குறைக்க ​வேண்டும்: மாட்டுவண்டி தொழிலாளர் கோரிக்கை

கடலூர்:

           மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ளும் கட்டணம் ரூ.47 என்று இருப்பதை ரூ.20 ஆகக் குறைக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.​ ​

அண்மையில் நடந்த இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ ​

                  ​விபத்துக்கள் நேரிட்டால் மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்கு நலவாரிய விபத்துக் காப்பீடு திட்டத்தில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.​ மாட்டுத் தீவன விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ ​காவல் துறையை வைத்து மாட்டு வண்டித் தொழிலை ஒடுக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்.​ இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14 அன்று சி.ஐ.டி.யூ.​ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.​ ​இக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.​ மாவட்டச் செயலர் வி.திருமுருகன் மற்றும் நிர்வாகிகள் டி.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior