உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கோடை விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோடை விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 17, 2012

கடலூர் சில்வர் பீச்சில் மே 23 முதல் கோடை விழா

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் கோடை விழா நடக்கவுள்ளது

.கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியது:

கடலூர் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் கோடை விழா நடக்கவுள்ளது. 23-ம் தேதி மாலை நடக்கவுள்ள தொடக்க விழாவில், ஊரக தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சிறப்பிக்க உள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பம்பை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதேபோல் மேற்கு வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில கிராம கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. பீச்வாலிபால், கபடி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி மற்றும் பொழுதுப்போக்கு சாதனங்களும் இடம்பெறும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில் பார்வையாளர்களுக்கான போட்டிகளும், அதற்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாக் குழு: விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.












Read more »

ஞாயிறு, மே 29, 2011

கடலூர் செம்மண்டலத்தில் புதிய பேருந்து நிலையம்: ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் : "

            "கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறினார். 

கடலூரில் ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறியது: 

              முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் நலன் கருதி 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை வரும் 1ம் தேதி துவக்கி வைக்கிறார். கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 பேர் 20 கிலோ அரிசி பெறும் பயனாளிகள் ஆவர். இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் அரசு விழாவாக வரும் 1ம் தேதி நடக்கிறது. 

         கடலூர் நகரில் நடைபாதை சீரமைக்கப்படும். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும். ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது போல் சில்வர் பீச் புதுப்பித்து படகு குழாம் சீரமைக்கப்படும். கோடை விழா அடுத்த ஆண்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சம்பத் கூறினார்.



Read more »

செவ்வாய், மே 03, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) கோடை விழா நடத்தப்படுமா?


சில்வர் பீச் உப்பங்கழிப் பகுதியில், சேதமடைந்து காணாமல் போன சுற்றுலாப் படகுத்துறை இருந்த இடம் இதுதான் என அடையாளம் காண்பிக்கும் பனைமரத் தூண்கள்.
கடலூர்:
 
           டலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டாவது கோடைவிழா நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

              சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்தபடியாக அழகான, நீளமான கடற்கரை என்று வர்ணிக்கப்படுவது சில்வர் பீச். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின், சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் இடம்பெறவில்லை. இருப்பினும், கடலூர் மாவட்ட நிர்வாகம் சில்வர் பீச்சை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறது.  

               அலைகள் தாலாட்டும் நீலநிற வங்கக் கடல், அதன் கரையில் ஆங்காங்கே அமைந்துள்ள மணல் திட்டுகள் மேல் இயற்கையாக வளர்ந்து உள்ள கொடிகளில் கண் சிமிட்டும் ஊதா நிறப் பூக்கள், படகுச் சவாரிக்கு ஏற்ற உப்பங்கழிப் பகுதி, அதன் அருகே சவுக்குத் தோப்புகள், வனத்துறையால் நடப்பட்டு, பராமரிப்பு இன்மையால் சிதைந்து கொண்டு இருக்கும் மாங்ரோவ் காடுகள், இதையடுத்து சிதைந்து கிடக்கும் புனித டேவிட் கோட்டை உள்ளிட்ட ஆங்கிலேயர் காலத்து கட்டடங்கள்.

                இவைகள் தான் வண்ண ஓவியமாய் காட்சி அளிக்கும் சில்வர் பீச்.  சுற்றுலா படகுத் துறை, குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, கலையரங்கம், காட்சிக் கோபுரம், அலங்கார செயற்கை நீரூற்று, ஹைமாஸ் விளக்குகள், குடிநீர் வசதி எனப் பல்வேறு பணிகளுக்காக, 2008-ம் ஆண்டு வரை சுமார் ரூ. 1 கோடிக்கு மேல் இங்கு செலவிடப் பட்டது.  2004-ம் ஆண்டு சுனாமியின்போது கடற்கரையியில்  இருந்த காட்சிக் கோபுரம் மண்ணில் புதையுண்டது. 2005-ம் ஆண்டு அது புதுப்பிக்கப்பட்டது. எனினும் தற்போது சிதைந்து பயனற்றுக் கிடக்கிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன.

               கடற்கரையில் காற்று வாங்க அமர்வதற்கு வசதியாக போடப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து விட்டன.  ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுத்துறையில் மரத்தால் அமைக்கப்பட்டு இருந்த இறங்கு தளங்கள் முற்றிலும் சிதைந்து, அதற்காக நடப்பட்ட பனை மரங்கள் மட்டும் வரலாற்றுச் சின்னங்கள் போல் காட்சி அளிக்கின்றன. ÷சுற்றுலாப் படகுகள் அனைத்தும் உப்பங்கழி அருகே கவிழ்த்துப் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த மின் விளக்கு கோபுரங்கள் பராமரிப்பு இன்மையால், வெளிச்சத்துக்குப் பதில் இருளை அள்ளித் தெளித்துக் கொண்டு இருக்கின்றன. 

            2001-ம் ஆண்டு ரூ.5 லட்சத்தில் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்துக் கொடுத்த பூங்கா இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று.  சுனாமியில் சிதைந்து போன சில்வர் பீச் புறக்காவல் நிலையத்துக்குப் பதில், அழகான புறக்காவல் நிலையம், மாடியில் சிற்றுண்டிச் சாலை, அதற்கு மேல் கடலின் அழகை ரசிக்க, காட்சிக் கோபுரம் என ராஜஸ்தான் அரசு கட்டிக் கொடுத்து இருந்தது. தற்போது இக் கட்டடத்தை காவல் துறை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டு, போலீஸ் அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றி இருப்பதன் மூலம் சில்வர் பீச் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 

               ஆண்டுதோறும் 5 நாள் வரை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்த சில்வர் பீச் சுற்றுலா கோடை விழாவும், 2008-ம் ஆண்டுடன் நின்று போயிற்று. இந்த ஆண்டாவது கோடை விழா நடைபெறுமா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டதற்கு, தேர்தல் பணியில் இருந்து விட்டால் போதும் என்ற நிலையில் இருக்கிறோம். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, கோடை விழா பற்றி சிந்திக்க எங்கே நேரம் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. புதிய அரசு அமையட்டும் அதன்பிறகு பார்க்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.  இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு வரும் பொதுமக்களிடம், வாகனக் கட்டணம் வசூல் மட்டும் எவ்விதத் தடையும் இன்றி நடந்து கொண்டிருக்கிறது. 

Read more »

வியாழன், ஏப்ரல் 22, 2010

கடலூர் சில்வர் பீச்சில் கோடை விழா நடத்தப்படுமா?

 கடலூர் : 

               கடலூர் சில்வர் பீச்சில் இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்படுமா என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
                   கோடை காலத்தில் பள்ளி விடுமுறையின் போது மாணவர்கள் குதூகலிக்க பொழுது போக்கு அம்சங்களுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பது வழக்கம். வசதி படைத்தவர்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங் களுக்கு சென்று பொழுதை கழிப்பார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளூரிலேயே நடக்கும் விழாக்களை பார்த்து மகிழ்ச்சி அடைவர். இதற்காக அரசு ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். விழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் அரசின் திட்டங்கள் யாவும் அரங்குகள் அமைத்து மக்களுக்கு விளக்கியும், பல்வேறு போட்டிகள் நடத்தி சிறுவர், பெண்களை ஊக்குவித்தும், கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
 
                 கடலூர் மாவட்டத்தில் நீண்ட சில்வர் பீச் அமைந்திருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். கடலூர் நகர மக்களுக்கு வேறெந்த பொழுது போக்கு அம்சமும் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இங்கு 5 நாட்கள் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோடையின் போது லோக்சபா தேர்தல் நடைபெற்றதால் கோடை விழா நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு சில்வர் பீச்சில் கோடை விழா நடத்தப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior