உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சமச்சீர் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமச்சீர் கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 27, 2011

தமிழக பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை

                 பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் முழுநேர, பகுதிநேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமனம், பாடப் புத்தக சுமை குறைப்பு, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.  

சட்டப்பேரவையில் தாமாக முன்வந்து விதி 110-ன் கீழ் அவர் சமர்ப்பித்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

                "அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்படும். 

               தரம் உயர்த்தப்படுவதற்கு ஏற்ப 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் ரூ. 315.30 கோடி செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்தப்படும்  உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

                 இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 99.29 கோடி செலவு ஏற்படும்.  முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். பொது பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது.  இதனை நன்கு உணர்ந்த இந்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்தக் கல்வி ஆண்டில் ரூ. 1082.71 கோடியில் இவை ஏற்படுத்தப்படும்.  

                 மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.  நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, ரூ. 90.70 கோடி செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும்.  1985 ஆம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 

                    மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி - அதாவது ஜியாமெட்ரி பெட்டி - கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு தோராயமாக ரூ. 119.48 கோடி செலவிடப்படும். 

                   அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவாகும்.  புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். 

                  10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளது.  எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.  குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.  

                 இந்த விளையாட்டினால் மாணவ, மாணவியரின் அறிவுத் திறன் வளர்வதுடன், கூர்மையாக சிந்திக்கும் ஆற்றலும் விரிவடையும்.  கணினி மூலம் கற்பது பள்ளிகளில் இப்போது இன்றியமையாததாக உள்ளது. எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் ஆசிரியைகளின் வகுப்புறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும், "பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை (தமிழ்நாடு)' என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். 

               இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கைக்கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  பள்ளிக் கல்வித் துறை மூலம் எனது அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும்' என்றார் முதல்வர்.   









Read more »

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய


 சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய

http://pallikalvi.in/Students/Text%20Book.htm













Read more »

புதன், ஆகஸ்ட் 10, 2011

கடலூரில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் விநியோகம் தொடக்கம்


கடலூரில் பள்ளிகளுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணியைப் பார்வையிடுகிறார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி. (வலதுபடம்)
கடலூர்:

           கடலூரில் சமச்சீர் கல்வித் திட்ட பாடப்புத்தகங்கள் விநியோகம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியது.  

               தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை, அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே அமல்படுத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.  உச்சநீதிமன்றத் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித் திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடலூர் கல்வி மாவட்டத்துக்கான சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கான பாடப்புத்தகங்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.  

                இந்த இரு மையங்களில் இருந்தும் பாடப்புத்தகங்கள் விநியோகம், செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கடலூரில் பாடப் புத்தகங்கள் விநியோகத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.   கடலூர் மாவட்டத்தில் 212 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட 1,600 பள்ளிகளுக்கு, சமச்சீர் கல்வித்திட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 

                 தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் (புதன்கிழமை) வழங்கப்படும் என்றும், மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், மாவட்ட பாடநூல் நிறுவன சேமிப்புக் கிடங்குகளில், பணம் செலுத்தி சமச்சீர் கல்வித்திட்ட பாடப் புத்தகங்களை பெற்றுக் கொள்வார்கள் என்றும், கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

                மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் இஷ்டப்படி தேர்வு செய்த பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கி இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும், ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை பள்ளி நிர்வாகங்கள் பெற்றோரைக் கசக்கிப் பிழந்து, பணம் வசூலித்து இருக்கின்றன. ஆனால் அரசு அச்சிட்டு வழங்கும் சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களின் விலையோ, மாணவர்களுக்கு தலா ரூ. 250 முதல் ரூ. 300 வரைதான் என்றும் அந்த அதிகாரி கூறினார். 





Read more »

Supreme Court ordered Implement Samacheer Kalvi in 10 days


A group of students with their
The HinduA group of students with their "Samacheer Kalvi" textbooks at a school in Kancheepuram

       The Supreme Court on Tuesday directed the Tamil Nadu government to implement Samacheer Kalvi (Uniform System of School Education) for classes 2 to 5 and 7 to 10 in ten days. 

           A three-Judge Bench of Justice J.M. Panchal, Justice Deepak Misra and Justice B.S. Chauhan dismissed a batch of appeals filed by the Tamil Nadu government and on behalf of association of matriculation schools, and impleadment application by the Tamil Nadu Anaithu Asiriyar Munnetra Peravai in support of the State challenging the Madras High Court judgment.

       The Bench upheld the High Court's decision declaring unconstitutional the amendment made to the Tamil Nadu Uniform System of School Education Act to defer implementation of the USSE and gave 25 reasons why the impugned judgment should be sustained. Writing the judgment, Justice Chauhan pointed out that even before the first Cabinet meeting of the new Government on May 22, i.e. on May 21, tenders were invited to publish the books under the old education system. “It shows that there had been a predetermined political decision to scrap the Act 2010. There was no material before the Government on the basis of which the decision not to implement the Act 2010 could be taken as admittedly the Expert Committee had not done any exercise of reviewing the syllabus and textbooks till then,” the Bench said.

          “Undoubtedly, there had been a few instances of portraying the personality by the leader of political party [M. Karunanidhi] earlier in power, i.e. personal glorification, self publicity and promotion of his own cult and philosophy, which could build his political image and influence the young students, particularly in the books of primary classes. Such objectionable material, if any, could be deleted, rather than putting the operation of the Act 2010 in abeyance for indefinite period.”

        The Bench pointed out that the Act 2010 was enacted to enforce the uniform education system in the State of Tamil Nadu to impart quality education to all children, without any discrimination on the ground of their economic, social or cultural background. The Act itself provided for its commencement, giving the academic years though in a phased programme i.e. for Standards I to VI from the academic year 2010-2011 and for other Standards from academic year 2011-2012. Thus, enforcement was not dependent on any further notification.

            It said, “The justification pleaded by the State that the Amendment Act 2011 was brought to avoid contempt proceedings, as the directions issued by the High Court [in the earlier April 2010 judgment], could not be complied with is totally a misconceived idea and not worth acceptance. The said judgment of the High Court was duly approved by a speaking order of this court dated September 10, 2010.” The Bench said, “The High Court as well as this court upheld the validity of the Act 2010. Thus, it was not permissible for the legislature to annul the effect of the said judgments by the Amendment Act 2011, particularly so far as I and VI Standards are concerned. The list of approved textbooks had been published and made known to all concerned. Thus, the Act 2010 stood completely implemented so far these standards were concerned.”

         It pointed out that certain directions had been given in the said judgment by the High Court which could have been complied with by issuing executive directions. Moreover, directions issued by the High Court could be complied with even by changing the Schedule as provided in the judgment dated April 30, 2010 itself. Further, it said Section 18 of the Act 2010 itself enabled the Government to issue any executive direction to remove any difficulty to enforce the statutory provisions of the Act 2010. The Act 2010 itself provided for an adequate residuary power with the government to remove any difficulty in enforcement of the Act 2010, by issuing an administrative order. 

Quality of textbooks 
 
                On the government's stand that various representations were received about the poor quality of textbooks, the Bench pointed out that the new government took over on May 16 and immediately thereafter, the Government received representations from various private schools/organisations on May 17/18 to scrap the USSE. “As most of these representations were made by the societies/organisations who had earlier challenged the validity of the Act 2010 and met their Waterloo in the hierarchy of the courts, such representations were, in fact, not even maintainable and, thus could not have been entertained by the Government.” 



Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு விவரம்



             தமிழ்நாட்டில்  கடந்த ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம்  வகுப்புகளில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்று கூறப்பட்டது.

           இதையடுத்து சமச்சீர் கல்வியை ஒத்தி வைக்க சட்டசபையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பெற்றோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது.  சமச்சீர் கல்வி சட்டத் திருத்தத்தை ரத்து செய்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சமச்சீர்  பாடப் புத்தகங்களை உடனடியாக வினியோகிக்க உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு  தீர்ப்பை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அதன் மீது 6 நாட்கள் வக்கீல்கள் வாதம் நடந்தது. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை. அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துகிறோம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
            ஆனால் பெற்றோர் தரப்பில் வாதாடிய வக்கீல்கள், அரசியல் ரீதியில் சமச்சீர் கல்வித் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 கோடியே 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என்றனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பஞ்சால், தீபக்வர்மா, சவுகான் ஆகியோர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
 
இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. காலை 10.34 மணிக்கு நீதிபதி சவுகான் தீர்ப்பை வாசித்தார்.

தீர்ப்பு விவரம் வருமாறு:-

**25   காரணங்களை ஆய்வு செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் அப்பீல் மனு உள்பட எல்லா மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

**தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும்.

**10 நாட்களில் சமச்சீர் கல்வி அமல்படுத் தப்பட வேண்டும்.

**சமச்சீர்  வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். அந்த தீர்ப்பில் நாங்கள் தலையிட முடியாது.


இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

           சுப்ரீம்  கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து தமிழ் நாட்டில் இந்த ஆண்டே ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
 
 
 
 
 

Read more »

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

                தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

           இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் வெடிகளை வெடித்து, இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior