உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 10, 2011

கடலூரில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் விநியோகம் தொடக்கம்


கடலூரில் பள்ளிகளுக்குப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணியைப் பார்வையிடுகிறார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி. (வலதுபடம்)
கடலூர்:

           கடலூரில் சமச்சீர் கல்வித் திட்ட பாடப்புத்தகங்கள் விநியோகம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியது.  

               தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்டத்தை, அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே அமல்படுத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.  உச்சநீதிமன்றத் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வித் திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடலூர் கல்வி மாவட்டத்துக்கான சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கான பாடப்புத்தகங்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன.  

                இந்த இரு மையங்களில் இருந்தும் பாடப்புத்தகங்கள் விநியோகம், செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கடலூரில் பாடப் புத்தகங்கள் விநியோகத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.   கடலூர் மாவட்டத்தில் 212 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட 1,600 பள்ளிகளுக்கு, சமச்சீர் கல்வித்திட்ட பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. 

                 தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று முதல் (புதன்கிழமை) வழங்கப்படும் என்றும், மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள், மாவட்ட பாடநூல் நிறுவன சேமிப்புக் கிடங்குகளில், பணம் செலுத்தி சமச்சீர் கல்வித்திட்ட பாடப் புத்தகங்களை பெற்றுக் கொள்வார்கள் என்றும், கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

                மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் இஷ்டப்படி தேர்வு செய்த பாடப் புத்தகங்களை, மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கி இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும், ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை பள்ளி நிர்வாகங்கள் பெற்றோரைக் கசக்கிப் பிழந்து, பணம் வசூலித்து இருக்கின்றன. ஆனால் அரசு அச்சிட்டு வழங்கும் சமச்சீர் கல்வித் திட்டப் பாடப் புத்தகங்களின் விலையோ, மாணவர்களுக்கு தலா ரூ. 250 முதல் ரூ. 300 வரைதான் என்றும் அந்த அதிகாரி கூறினார். 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior