உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மேட்டுக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேட்டுக்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 11, 2012

மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி வளாகத் திருமாளிகையில் திரு அறை தரிசனம்


வடலூர் மேட்டுக்குப்பம் திரு அறையைத் தரிசிக்கும் சன்மார்க்க அன்பர்கள்.
நெய்வேலி:

                              வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை திருஅறை தரிசனம் செய்தனர்.

             தனது வாழ்நாளில் அரும்பெரும் பணிகளை செய்துவந்த வள்ளலார் ராமலிங்க அடிகள் இறுதியாக வடலூருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் 1870-ம் ஆண்டுமுதல் உறையத் தொடங்கினார். மேட்டுக்குப்பத்தில் அவர் வசித்த திருமாளிகைக்கு சித்தி வளாகம் என அழைக்கப்பட்டது. அங்கு வசித்த வள்ளல் பெருமானார் கார்த்திகைத் தீபத் திருநாளான்று, திருமாளிகை உள்ளிருந்த விளக்கை புறத்தில் வைத்து, இதைத் தொடர்ந்து ஆராதியுங்கள், இந்தக் கதவை சாத்திவிடப் போகிறேன், ஆண்டவர் இனி தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள், நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன், இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் எனக் கூறிவிட்டு கதவை சாத்திக் கொண்டார். 1874 தைத் திங்கள் 19-ம் நாள் சித்திவளாகத் திருமாளிகையிலேயே தமது திருவறையில் பெருமானார் அருட்பெருஞ்ஜோதியானார். 

               இந்த திருமாளிகை திருவறையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்துக்கு பின் 3-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் திருஅறை தரிசனம் நடைபெறும்.÷இந்த திருஅறை தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்வர். அதுபோன்று இந்த ஆண்டு நடைபெற்ற தரிசனத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 











Read more »

வியாழன், மார்ச் 25, 2010

ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி: 

                  மேட்டுக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டுக்குப்பம் கிராமத்தில் குளத்தை ஆழப்படுத்தி படித்துறை அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மற்றும் இரண்டு வாட்டர் டேங்கில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். மேட்டுக்குப் பம் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி, பானுமதி, ஜோதி, செல்வராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவீந் திரன், மாவட்ட தலைவர் துரைராஜ், ஒன்றிய தலைவர் ஏழுமலை, செயலாளர் தண்டபாணி, பொருளாளர் வாசு, துணை தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior