உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

அரசு பஸ் நடத்துனர்களின் அலட்சியம்:நள்ளிரவில் பரிதவித்த பஸ் பயணிகள்

கடலூர்:

                  அரசு பஸ் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களிடையே ஒத்துழைப்பு இல்லாததால் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் அவதிப்பட்டனர்.அரசு போக்குவரத்துக் கழகங்கள் நிர்வாக வசதிக்காக 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இயக்கி வருகின்றன. போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒற்றுமையின்மையால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நள்ளிரவு நேரத்தில் அவதிப்படும் நிலை ஏற்பட்டது. சேலம் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பஸ் (டி.என்.30, என்.0799) நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சேலம் பஸ் நிலையத்திலிருந்து புறப் பட்டு, புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தது.

                பஸ்சில் 65க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதில் புதுச்சேரி பயணிகள் 17 பேரும், கடலூர் பயணிகள் 15 பேரும் இருந்தனர்.நள்ளிரவு 12.30 மணிக்கு ஆத்தூர் - தலைவாசல் இடையே பஸ் பழுதாகி நின்றது. அப்போது மழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டு கும்மிருட்டில் பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ்சை மீண்டும் ஓட்ட முடியாது என டிரை வர் கைவிரித்து விட்டார். கட்டணத்தை திருப்பித் தருமாறு பயணிகள் கேட்டனர். ஆனால், கட்டணத்தை திருப்பித் தருவதற்கில்லை; வேண்டுமென் றால் இவ்வழியாக வரும் அரசு பஸ்சில் ஏற்றி விடுவதாக நடத்துனர் நடுசாமி திட்டவட்டமாக கூறினார். பயணிகளும் மழையில் நனைந்தபடியே வேறு பஸ்சை எதிர்நோக்கி காத்திருந்தனர். 2 மணி நேரம் கடந்து அவ்வழியாக வந்த கோவை மண்டல பஸ்சில் (டி.என்.33. என்.2463) நடத்துனர் புதுச் சேரி பயணிகளை மட்டும் ஏற்றி விட்டார் .பஸ்சில் ஏறியவுடன் நடத்துனர், "மீண்டும் டிக் கெட் வாங்கினால் தான் பயணம் செய்ய முடியும். இல்லாவிட்டால் இறங்கிக் கொள்ளுங்கள்' என கூறினார்.

                  பயணிகள் எவ்வ ளவோ மன்றாடியும் பல னில்லை. வேறு வழி யின்றி நடத்துனர், பயணிகளை இறக்கி விட்டுச் சென்றார். இதேபோல் சென்னை செல்லும் பல பஸ்சில் பயணிகளை ஏற்ற எந்த போக்குவரத்துக் கழகமும் முன் வரவில்லை. விடியவிடிய அவதிப்பட்ட பயணிகள் பலர் மீண்டும் டிக்கெட் வாங்கிக் கொண்டு கிடைத்த பஸ்களில் புறப்பட்டனர்.போக்குவரத்துக் கழக பஸ்கள் பழுதாகும் போது, இப்படிப்பட்ட உதவிகள் செய்ய போக்குவரத்துக் கழகங்கள் உதவ முன் வராததால் பயணிகள் விடிய விடிய காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Read more »

சீமான் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் கைது

கடலூர்:

                நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைதை கண்டித்து, கடலூரில் போஸ்டர் ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேசியதாக, வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

                      சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடலூரில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் "தமிழகத்தில் நடப்பது தமிழக அரசா அல்லது சிங்கள அரசா' என்ற தலைப்பில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டினர்.இதுபற்றி தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுவரில் போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கடலூர் சிவானந்தபுரத்தைச் சேர்ந்த ஜலதீபன் (29), புதுச்சத்திரம் அடுத்த வேலங்கிராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவாகரன் (25) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Read more »

கடலூர் செஷன்ஸ் கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு

கடலூர்:

               வக்கீல்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பண்ருட்டி வக்கீல் செல்வம் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 

                   அதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடலூர் அருள் நாதன் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் வேதநாயகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் போடுவதை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக்கோரியும் அடுத்த வாரம் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் செயலர் கிருஷ்ணசாமி, இணை செயலர் அனந்தராமன் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior