உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

கடலூர் செஷன்ஸ் கோர்ட் வக்கீல்கள் புறக்கணிப்பு

கடலூர்:

               வக்கீல்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பண்ருட்டி வக்கீல் செல்வம் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கோரி வக்கீல்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 

                   அதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கடலூர் அருள் நாதன் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் வேதநாயகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் போடுவதை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக்கோரியும் அடுத்த வாரம் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் செயலர் கிருஷ்ணசாமி, இணை செயலர் அனந்தராமன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior