உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

சீமான் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் கைது

கடலூர்:

                நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைதை கண்டித்து, கடலூரில் போஸ்டர் ஒட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் இந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேசியதாக, வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

                      சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடலூரில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் "தமிழகத்தில் நடப்பது தமிழக அரசா அல்லது சிங்கள அரசா' என்ற தலைப்பில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டினர்.இதுபற்றி தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுவரில் போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கடலூர் சிவானந்தபுரத்தைச் சேர்ந்த ஜலதீபன் (29), புதுச்சத்திரம் அடுத்த வேலங்கிராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவாகரன் (25) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior