உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 12, 2010

கடலூர் மாவட்டத்தில் வேளாண் உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 
 
              வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
 
                   தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் பயிறு வகை பயிர்களின் உற்பத் தியை பெருக்க சிறப்புத் திட்டத்தின் கீழ் குமராட்சி மற்றும் விருத்தாசலம் வட்டாரங்களில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் 6 மாதத்திற்கு வேளாண் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.  மாத சம்பளம் 8,000 ரூபாய். 
 
                  மேற்கண்ட பணிக்கு விருப்பம் உள்ள பி.எஸ். சி., (விவசாயம்) பட்டதாரிகள் வரும் 18ம் தேதிக் குள் தங்களது விண்ணப் பங்களை கடலூர் செம்மண்டலம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். குமராட்சி மற்றும் விருத்தாசலம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

                      கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு நேரடியாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் மாவட்டத்தில் காலியாக உள்ள 166 அங்கன்வாடி பணியாளர்கள், 63 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 112 உதவியாளர் பணியிடங்களை இன சுழற்சி முறையில் நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

                           காலிப் பணியிடங்கள் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணிகளுக்கு 20 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், விதவை எனில் 40 வயதிற்கு உட்பட்டவராகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், உள்ளூரில் வசிப்பவராகவும், இல்லை எனில் காலி பணியிட மையத்திற்று 3 கி.மீ., தூரத்திற்குள் வசிக்க வேண்டும்.

                  அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருப்பதோடு, மேற்கூறிய தகுதிகள் இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பணி இடத்தை குறிப்பிட்டு வரும் 11ம் தேதி முதல் 29ம் தேதி மாலை 5.45 மணிக் குள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ்கள், ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்றுகள், விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.

Read more »

கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் : 

             கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கடலூர் அடுத்த சுப்ரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர் நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை தாங்கினார். 

                       பள்ளியின் செயலாளர் திருவடி துவக்கி வைத்தார். கண்காட்சியில் காற்று மற்றும் நீர் மாசுபடுத்தல் பற்றியும், இயற்கை உணவுகள் மற்றும் காய்கறிகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக விளக்கிக் கூறினர். மேலும் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு தலைப்பின் கீழ் செயற்கைக்கோள் இயக் கத்திற்கு ஏற்ப பூமியின் அன்றாட நிகழ்வுகள் நடப்பது குறித்து மாணவர்கள் விளக்கினர். மேலும் வீட்டில் திருட்டை தடுக்கும் வகையில் மதில் சுவரில் மின் இணைப்பு அலாரம் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior