உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 17, 2011

கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் பழைய தபால் தலைகள் மாணவர்களுக்கு அன்பளிப்பு

கடலூர்:

        மாணவ, மாணவிகளுக்கு பழைய தபால் தலைகள் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

             தேசிய அஞ்சலக வார விழாவையொட்டி கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் தபால் தலைகள் சேகரிக்கும் ஆர்வமுள்ள 30 மாணவ, மாணவிகளுக்கு உபயோகித்த பழைய தபால் தலைகள், உள் நாட்டு கடிதங்கள், விதவிதமான அஞ்சல் அட்டைகள் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் 50 பைசா அஞ்சல் அட்டையில் 

தங்களின் பெயர், 
படிக்கும் வகுப்பு, 
மொபைல் எண், 
வீட்டு முகவரி

        உள்ளிட்ட விவரங்களை 

மாவட்ட பாரதிதாசன் நற்பணி மன்றம், 
எண் 41, காமராஜர் நகர்,
ஆல்பேட்டை, 
கடலூர் 

                   என்ற முகவரிக்கு நாளை (18ம் தேதி) க்குள் அனுப்ப வேண்டும். இத்தகவலை பாரதிதாசன் மன்றத் தலைவர் கடல் நாகராசன் தெரிவித்துள்ளார். 







Read more »

கடலூர் நகராட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் வில்வநகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு


கடலூர்:

          கடலூர் நகரசபை தலைவர் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் ஏ.எஸ்.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் கடலூர் வில்வநகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் மற்றும் நிர்வாகிகள், ஆற்காடு லுத்தரன் திருச்சபை மற்றும் 12, 13, 14 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
 
கடலூர் நகரசபை தலைவர் காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் ஏ.எஸ்.சந்திரசேகரன் பேசியது 
 
         எங்களுக்கு வாக்களித்து நகரசபைக்கு தேர்ந்து எடுத்தால் கடலூர் நகரின் பாதாள சாக்கடை திட்டத்தை நாள் கணக்கில் முடித்து கொடுத்து மக்கள் சுதந்திரமாக சாலையில் வருவதற்கு ஏற்பாடு செய்வேன். மேலும் உங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்து கொடுப்பேன் என்றார்.  இவருடன் மாவட்ட துணைத்தலைவர் கலை விஜயகுமார், தொகுதி தலைவர் ராமராஜ், ரமேஷ், ஆனந்தன், காயல் ராஜேந்திரன், சிவாஜி கண்ணன், செல்லசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் நகராட்சி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா மஞ்சகுப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/28d6f849-278e-4863-a165-af74916ab263_S_secvpf.gif
 
 
கடலூர்:
          
        கடலூர் நகரசபை தலைவர் தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா கடலூர் மஞ்சக்குப்பம் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, முதுநகர், சுனாமி நகர், சுப்பராயலு நகர், போடி செட்டி தெரு, மாரியம்மன் கோவில் தெரு, பிடாரி கோவில் தெரு உள்பட பல பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.

கடலூர் நகராட்சி தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராஜா பேசியது
 
                  எங்களுக்கு வாக்களித்து நகரசபைக்கு தேர்ந்து எடுத்தால் கடலூர் நகரில் குண்டும்- குழியுமான சாலை உடனடியாக சீரமைத்து கொடுப்பேன். மேலும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர், உங்கள் பகுதியில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றார்.  இவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகர செயலாளர் தங்கராசு, முன்னாள் நகரமன்ற தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், கணேசன், வக்கீல் வனராசு, ஒ.எல்.பெரியசாமி, தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், மாணவர் அணி அகஸ்டின் பிரபாகரன், ஏ.ஜி.எஸ்.பாபு, ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior