உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 11, 2009

விருத்​தா​ச​லம் நகர தேவை​களை​ சட்​ட​மன்​றத்​தில் பேச ஆளில்லை

நெய்வேலி, ​​ டிச.​ 10:​ 

                       விருத்​தா​ச​லம் நகர வளர்ச்​சிப் பணி​கள் மற்​றும் தேவை​கள் குறித்து தமி​ழக சட்​டப்​பே​ர​வை​யில் பேச ஆளில்லை என்​றார் நகர்​மன்​றத் தலை​வர் வி.கே.​ முரு​கன்.​ இத​னால் பல்​வேறு பணி​கள் தடை​பட்​டி​ருப்​ப​தா​க​வும் கவலை தெரி​வித்​தார்.​

                    இ​து​கு​றித்து அவர் மேலும் கூறி​யது:​ எங்​க​ளைப் பொருத்​த​மட்​டில் கடந்த 3 ஆண்​டு​க​ளில் ரூ.16 கோடி மதிப்​பீட்​டி​லான வளர்ச்​சிப் பணி​கள் நடை​பெற்​றுள்​ளன.​ இம்​மா​தம் 11-ம் தேதி நடை​பெற உள்ள நகர்​மன்​றக் கூட்​டத்​தில் மேலும் ரூ.3 கோடி மதிப்​பீட்​டி​லான வளர்ச்​சிப் பணி​க​ளுக்கு திட்​டங்​கள் தயார் செய்​யப்​பட்டு,​​ அவை ஒப்​பு​தல் பெறப்​பட உள்​ளன.​

               தெரு விளக்​கு​கள் பரா​ம​ரித்​தல் பணியை தனி​யாரை விட முடி​வு​செய்து அதற்​கான ஒப்​பந்​த​தா​ர​ரும் நிய​மிக்​கப்​பட உள்​ள​னர்.​ இதே​போன்று நக​ரில் குவி​யும் குப்​பை​களை மக்​கும்,​​ மக்​காத குப்​பை​கள் எனத் தரம் பிரித்து,​​ மக்​காக குப்​பை​களை அகற்ற தனி​யார் நிறு​வ​னத்​து​டன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளோம்.​
ரூ.​ 40 லட்​சம் மதிப்​பீட்​டில் விருத்​தா​ச​லம்-​ திருச்சி சாலை​யில் புற​வ​ழிச் சாலை அமைக்​கும் பணி நடை​பெற்​று​வ​ரு​கி​றது.​ பாதாள சாக்​க​டைத் திட்​டம் மற்​றும் பஸ் நிலைய இட​மாற்​றம் இவ்​வி​ரண்டு பணி​க​ளும் கிடப்​பில் உள்​ளன.​ இது​தொ​டர்​பாக சட்​டப்​பே​ர​வை​யில் விஜ​ய​காந்த் எது​வும் பேசு​வது கிடை​யாது.​

                  பு ​திய பஸ் நிலை​யம் கட்​டு​வ​தற்கு விருத்​தா​ச​லம் சந்​திப்பு எதிரே 5.7 ஏக்​கர் இடம் தேர்​வு​செய்​துள்​ளோம்.மேலும் பாதாள சாக்​க​டைத் திட்​டத்​தின் மூலம் கழி​வு​நீரை கொண்​டு​செல்​லும் வழி குறித்​தும் சட்​டப்​பே​ர​வை​யில் பேசி உள்​ளாட்​சித் துறை அமைச்​சர் கவ​னத்​திற்கு தொகுதி எம்​எல்ஏ முயற்​சித்​தால் மட்​டுமே,​இப்​ப​ணி​கள் விரை​வில் நடை​பெற வாய்ப்​புண்டு.​

            வி​ருத்​தா​ச​லம் விருத்​த​கி​ரிஸ்​வ​ரர் கோயில் எதிரே இருந்த நந்​த​வன இடத்​தில் மார்க்​கெட் அமைந்​தி​ருந்​தது.​ தற்​போது ​ அந்த மார்க்​கெட்டை அகற்றி,​​ வாகன நிறுத்​த​மி​ட​மாக மாற்ற முயற்சி மேற்​கொண்​டால்,​​ கோயில் நிர்​வா​கத்​தி​னர்,​​ அனு​மதி மறுக்​கின்​ற​னர்.போக்​கு​வ​ரத்​துப் போலீ​சா​ரும் பொறுப்​பற்ற முறை​யில் இருப்​ப​தால் வாகன நெரிச​லில் மக்​கள் சிக்​கித் தவிக்​கி​றார்​கள் என்​றார் அவர்.​

Read more »

பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​ பணி​யி​டங்​கள்:​ பதிவு மூப்​புப் பட்​டி​யல் வெளி​யீடு

கடலூர்,​​ டிச.​ 10:​ 

                          பட்​ட​தாரி ஆசி​ரி​யர் பணி​டங்​க​ளுக்கு கட​லூர் மாவட்ட வேலை​வாய்ப்பு அலு​வ​ல​கத்​தில் இருந்து பரிந்​துரை செய்​யப்​பட்​ட​வர்​கள் பட்​டி​யல் கட​லூர் மாவட்ட இணைய தளத்​தில் வெளி​யி​டப்​பட்டு உள்​ளது.​

                   இ​து​கு​றித்து கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

 த ​மிழ்​நாடு அரசு ஆசி​ரி​யர் தேர்வு வாரி​யத்​தால் அறி​விக்​கப்​பட்​டுள்ள பட்​ட​தாரி ஆசி​ரி​யர் பணி​யி​டங்​க​ளுக்கு,​​ கட​லூர் மாவட்ட வேலை​வாய்ப்பு அலு​வ​ல​கத்​தில் பதிவு செய்து கொண்​ட​வர்​க​ளின் பெயர்​கள் பரிந்​துரை செய்​யப் படு​கின்​றன.​ 31-10-2009 வரை பதிவு செய்து கொண்​ட​வர்​க​ளின் பெயர்​கள் மற்​றும் பதிவு மூப்பு விவ​ரங்​கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீன்க்க்​ஹப்ர்ழ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்​ என்ற ​ இணைய தளத்​தில் வெளி​யி​டப் பட்டிருக்​கி​றது.​

                க​ட​லூர் மாவட்ட வேலை​வாய்ப்பு அலு​வ​ல​கத்​தில் பதிவு செய்​துள்ள பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​கள்,​​ முன்​னு​ரிமை உள்​ள​வர்​கள்,​​ முன்​னு​ரிமை அற்​ற​வர்​கள்,​​ தங்​க​ளது பெயர்,​​ பதிவு எண்,​​ மற்​றும் பதிவு மூப்பு விவ​ரங்​களை இந்த இணைய தளத்​தில் தெரிந்து கொள்​ள​லாம்.​ இதில் பெயர் விவ​ரங்​கள் விடு​பட்டு இருந்​தாலோ சந்​தே​கங்​கள் இருந்​தாலோ பதிவு அடை​யாள அட்டை மற்​றும் அசல் கல்​விச் சான்​று​டன் கட​லூர் மாவட்ட வேலை​வாய்ப்பு அலு​வ​ல​ரைத் தொடர்பு கொண்டு சரி​பார்த்​துக் கொள்​ள​லாம் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

Read more »

பண்​ருட்டி குப்​பை​களை கொட்ட இடம்​ தயார்: டி.ஆர்.ஓ.

பண்ருட்டி,​​ டிச.​ 10:​ 

                  பண்​ருட்டி நக​ரில் சேக​ரிக்​கப்​ப​டும் குப்​பை​களை கொட்ட தனி​யா​ரி​ட​மி​ருந்து நிலம் வாங்​கப்​பட உள்​ளது.​ இதற்​கான மதிப்​ப​றிக்கை ஒரு வாரத்​திற்​குள் நக​ராட்​சி​யி​டம் அளிக்​கப்​ப​டும் என்று மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் புதன்​கி​ழமை கூறி​னார்.​ பண்​ருட்டி விழ​மங்​க​லம் பகு​தி​யில் வாந்தி-​பேதி ஏற்​பட்​ட​தில் முதி​ய​வர் ரங்​க​நா​தன் ​(65) செய்​வாய்க்​கி​ழமை இறந்​தார்.​ 50-க்கும் மேற்​பட்​டோர் பாதிக்​கப்​பட்டு அரசு மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​ த​க​ வல் அறிந்த மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் நோய் பாதித்த விழ​மங்​க​லம் பகு​தியை புதன்​கி​ழமை பார்​வை​யிட்​டார்.​ இதனை தொடர்ந்து கெடில நதி,​​ சுடு​காடு ஆகிய பகு​தி​க​ளில் குப்பை கொட்​டப்​ப​டும் இடங்​களை அவர் பார்​வை​யிட்​டார்.​ நக​ராட்சி ஆணை​யர் கே.உமா​ம​கேஸ்​வரி உட​னி​ருந்​தார்.​÷அப்​போது அப்​ப​கு​தி​யில் வசிப்​ப​வர்​க​ளும்,​​ வண்​ணான் துறை​யில் துணி துவைத்​துக் கொண்​டி​ருந்​த​வர்​க​ளும்,​​ குப்​பை​க​ளில் இருந்து வரும் துர் நாற்​றத்​தால் பாதிக்​கப்​ப​டு​வ​தாக புகார் கூறி​னர்.​

               இ​து​கு​ றித்து நக​ராட்சி ஆணை​யர் கூறு​கை​யில்,​​ ""பண்​ருட்​டி​யில் குப்பை கொண்ட இடம் இல்லை.​ நக​ரப் பகு​தி​யில் உள்ள நக​ராட்சி இடத்​தில் குப்பை கொட்​டி​னால் பொது மக்​கள் எதிர்ப்பு தெரி​விக்​கின்​ற​னர்.​ எனவே சேமக்​கோட்​டை​யில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.​ தனி​யார் வச​முள்ள அந்த நிலத்தை நக​ராட்சி வாங்க இருக்​கி​றது.​ இந்த நிலத்​திற்​கான மதிப்​பீடு அறிக்கை தயா​ரித்து அளிக்​கும்​படி வரு​வாய்த் துறை​யி​டம் கோரி​யுள்​ளோம்'' என்​றார்.​

           அப்​போது உட​னி​ருந்த மாவட்ட வரு​வாய் அலு​வ​லர்,​​ ​ அந்த நிலத்​துக்​கான மதிப்​பீடு அறிக்கை இன்​னும் ஒரு வாரத்​தில் தயா​ரித்து,​​ அனுப்பி வைக்​கப்​ப​டும் என்​றார்.​ மேலும் அந்த இடத்தை வாங்​கு​வ​தற்​கான நட​வ​டிக்​கையை விரைந்து மேற்​கொள்​ளும்​படி அவர் நக​ராட்சி ஆணை​ய​ரி​டம் கூறி​னார்.​வட்​டாட்​சி​யர் ஆர்.பாபு,​​ சுகா​தார அலு​வ​லர் பாலச்​சந்​தி​ரன் ஆகி​யோ​ரும் அப்​போது உட​னி​ருந்​த​னர்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior