உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 11, 2011

பூண்டு பற்றிய தாவரவியல் தகவல்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6mJEdl_kCWcPzV-vaPuLa2C4PnWGdC-J0VZpM2c4WIunfY_VRVf64__fi9kqO6RObPPyM1tUMhxb6DeC_eZ1Vx1PbNqNz_YOSYu0hh2j3fp4s4xXin_7L2V8TBdyKe7vBRMWWxsvl0QFq/s1600/DSC00135.JPG




பெயர்: பூண்டு

வேறு பெயர்கள் : வெள்ளைப்பூண்டு 

தாவரப்பெயர்: ALLIUM SATIVUM.

தாவரக்குடும்பம்: AMARYLLIDACEAE.   

பயன் தரும் பாகங்கள்: வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.

5. பயன்கள்

          இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.
 
            எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.
 
         சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.
 
* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
 
* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
 
* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.
 
* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
 
* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.
 
* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.
 
* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
 
* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
 
* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.
 
* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
 

Read more »

கடலூரில் மணல் விலை ஏற்றம்: கட்டுமானப் பணிகள் பாதிப்பு


கடலூர் பெண்ணை ஆற்றில் மணல் எடுத்து வரும் மாட்டுவண்டிகள்.
கடலூர்:

         கடலூரில் திடீரென ஆற்று மணல் விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.  

              கடலூரில் 6 மாதங்களுக்கு முன்பு வரை மாட்டுவண்டி மணல் ரூ. 350 க்கும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைத்து வந்தது. மழை காலத்தில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது மணல் எடுப்பதில் சிரமம் இருப்பதால் அத்தகைய காலங்களில் மணல் விலை உயர்வது உண்டு. ஆனால் நல்ல கோடை காலத்தில் கடலூரில் மணல் விலை அபரிமிதமாக உயர்ந்து வருவது, வீடு கட்டுவோரையும், ஒப்பந்ததாரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  கடலூரில் தற்போது மாட்டு வண்டி மணல் ரூ. 1,000 ஆகவும், ஒரு லாரி மணல் (3 யூனிட்) ரூ. 8 ஆயிரமாகவும் உள்ளது. 

              சில தினங்களுக்கு முன் நெல்லிக்குப்பத்தை அடுத்த, பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றில் புதிதாக மணல் குவாரி தொடங்கப்பட்டு உள்ளது.  இங்கு இருந்து கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகளில் மணல் கிடைக்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் ஒரு லாரி மணல் ரூ. 5 ஆயரம் முதல் ரூ. 6 ஆயிரமாக உள்ளது. பண்ருட்டியில் மாட்டு வண்டி மணல் விலை ரூ. 350 ஆகவும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரம் ஆகவும் உள்ளது. திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் டிராக்டர் இழுக்கும் டயர் வண்டி மணல், ரூ. 200 முதல் ரூ. 250 வரையிலும், ஒரு லாரி மணல் ரூ. 2 ஆயிரத்துக்கும் கிடைக்கிறது. ஆனால் கடலூரில் மட்டும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, ஏன் இந்த விலை ஏற்றம் என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்.  

               கடலூரில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு ஆகியவை கடலூர் நகராட்சி வழியாக ஓடிக் கடலில் கலக்கின்றன. கெடிலம் ஆற்றில் மணல் எடுக்க, ஏனோ அனுமதிக்க வில்லை. மணல் விலை ஏற்றம் காரணமாக, கடலூர் கட்டுமானச் செலவுகள் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. மணல் விலை உயர்வால் நகராட்சி மற்றும் அரசு கட்டுமானப் பணிகளில், உப்பங்கழிப் பகுதிகளில் காணப்படும் உவர் மண்ணையும், ஆற்றங்கரைகளில் உள்ள தரம் குறைந்த மண்ணையும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள்.  

                 இதனால் அரசுக் கட்டடங்கள் மற்றும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை சிமெண்ட் சாலைகளின் தரம் படுமோசமாகிக் கொண்டு இருக்கிறது. இத்தனை மோசமான மணலைக் கொண்டு கட்டப்படும் கடலூர் பாதாளச்சாக்கடை திட்டப் பணிகளின் கட்டுமானங்கள் என்னவாகும் என்ற கவலையும் கடலூர் மக்களுக்குத் தோன்றி இருக்கிறது.  கடலூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நத்தப்பட்டு பெண்ணை ஆற்றில் அள்ளப்படும் மணலுக்கு, மாட்டு வண்டிக்கு பொதுப்பணித்துறை வசூலிக்கும் கட்டணம் ரூ. 48 மட்டுமே. கடலூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டாம்பாக்கம் பெண்ணை ஆற்றுக் குவாரியில், மணல் அள்ளும் லாரிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 650 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 

              ஆனால் இந்த லாரிகளும், மாட்டு வண்டிகளும் கடலூர் மக்களிடம் அபரிமிதமாகக் கட்டணம் வசூலிப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.  நுகர்வோருக்கு ஏற்பட்டு இருக்கும் மணல் விலை ஏற்றத்தால், அரசுக்கு வருவாய் அதிகாரித்தால்கூட மக்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இடைத்தரகர்கள்தான் மணல் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள், மணல் சப்ளை செய்யும் லாரி உரிமையாளர்கள்.  மேலும் மணல் எடுத்து வரும் வழியில் உள்ள கிராமங்களில், செல்வாக்கு மிக்க நபர்கள் மாட்டு வண்டிகளிடம், கோயில் விழாக்களுக்காக என்று கூறி, ஒரு நடைக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை வசூலிக்கிறார்கள். 

              அதற்கு ரூ. 20 க்கு ரசீதும் கொடுக்கிறார்கள். பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றில், பணம் செலுத்தி மணல் அள்ளுவோரிடம், இத்தகைய நபர்கள் பணம் வசூலிக்க அனுமதி அளித்தது யார் என்று தெரியவில்லை. 

 மணல் விலை ஏற்றம் குறித்து, லாரி உரிமையாளர் சங்கர் கூறுகையில், 

                பட்டாம் பாக்கத்தில் கடந்த ஒரு வாரமாக குவாரி செயல்படுகிறது. இக்குவாரியை இடைத் தரகர்கள் சிலர் கைப்பற்றிக் கொண்டு, மற்ற லாரிகளை உள்ளே அனுமதிப்பது இல்லை. வெளியூர்களில் இருந்து செல்லும் லாரிகள், ஒரு லோடு மணலுக்காக, 3 நாள்கள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது.  அப்பகுதித் தரகர்கள் பெருவாரியாக மணல் எடுத்து, தங்கள் சொந்த இடங்களில் கொட்டி வைத்துக் கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதுவே மணல் விலை உயர்வுக்குக் காரணம். இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, மாட்டு வண்டிக்காரர்கள் விலை உயர்த்தி விட்டனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.     




Read more »

வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு


தற்போது நீர் நிரம்பிய நிலையில் உள்ள வீராணம் ஏரி.
சிதம்பரம்:
 
         கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 76 கன அடி நீர் ஞாயிற்றுக்கிழமை முதல் அனுப்பப்படுகிறது. 
 
             இந்நிலையில் ஏரியிலிருந்து பாசனத்துக்கு முழு அளவில் நீர் திறந்து விடப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீராணம் ஏரியிலிருந்து மண் எடுத்து, கொள்ளிடம் இடதுகரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றதாலும், அணைக்கரையில் உள்ள கீழணையில் பாலம் மற்றும் ஷட்டர் சீரமைக்கும் பணி நடைபெற்றதாலும் வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு ஏரி கடந்த 5 மாதங்களாக வறண்டு கிடந்தது. 
 
              இதனால் ஏரியிலிருந்து மார்ச் மாதம் முதல் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. தற்போது கீழணையிலிருந்து ஏரிக்கும், பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து வீராணம் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 43 அடி (மொத்தக் கொள்ளளவு 47.50 அடி) நீர் உள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாற்றின் வழியாக 1800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் கோபால் ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரியை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
 
             பின்னர் வீராணம்ஏரியில் உள்ள சேத்தியாத்தோப்பு பூர்த்தங்குடி நீர் வாங்கி நெடுமாடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டது.சென்னைக்கு குடிநீர் அனுப்பும் தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் கோபால், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறுவை சாகுபடி பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும் பாசனத்துக்கு முழு அளவில் நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி. இளங்கீரன் தெரிவித்தார்
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior