உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 11, 2011

வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு


தற்போது நீர் நிரம்பிய நிலையில் உள்ள வீராணம் ஏரி.
சிதம்பரம்:
 
         கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து கடந்த 5 மாதங்களுக்கு பிறகு சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 76 கன அடி நீர் ஞாயிற்றுக்கிழமை முதல் அனுப்பப்படுகிறது. 
 
             இந்நிலையில் ஏரியிலிருந்து பாசனத்துக்கு முழு அளவில் நீர் திறந்து விடப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீராணம் ஏரியிலிருந்து மண் எடுத்து, கொள்ளிடம் இடதுகரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றதாலும், அணைக்கரையில் உள்ள கீழணையில் பாலம் மற்றும் ஷட்டர் சீரமைக்கும் பணி நடைபெற்றதாலும் வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு ஏரி கடந்த 5 மாதங்களாக வறண்டு கிடந்தது. 
 
              இதனால் ஏரியிலிருந்து மார்ச் மாதம் முதல் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்திற்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது. தற்போது கீழணையிலிருந்து ஏரிக்கும், பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து வீராணம் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 43 அடி (மொத்தக் கொள்ளளவு 47.50 அடி) நீர் உள்ளது. ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாற்றின் வழியாக 1800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் கோபால் ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரியை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
 
             பின்னர் வீராணம்ஏரியில் உள்ள சேத்தியாத்தோப்பு பூர்த்தங்குடி நீர் வாங்கி நெடுமாடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டது.சென்னைக்கு குடிநீர் அனுப்பும் தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் கோபால், கடலூர் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறுவை சாகுபடி பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும் பாசனத்துக்கு முழு அளவில் நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் எனவும் நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி. இளங்கீரன் தெரிவித்தார்
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior