உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 14, 2012

தானே புயல் : கடலோர் மாவட்டத்திற்கு 60 லட்சம் முந்திரி கன்றுகள் தேவை

விருத்தாசலம்:
 
            புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 லட்சம் மரக்கன்றுகள் தேவை என வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி, பலா, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு சேத மதிப்பை அறியவும், புதிய நடவு குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டில்லி வேளாண் விரிவாக்க பொது துணை இயக்குநர் கோகடே தலைமை வகித்தார். விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். 
 
இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்தது:  
 
            புயலால் கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, தென்னை உள்ளிட்ட மரங்கள் பலத்த சேதமடைந்துள்ளது. இவைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதன்பிறகு விவசாயிகள் குறுகிய ரக பயிர் விளைவிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். முந்திரி விவசாயம் 30 ஆயிரம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முந்திரி கன்றுகளை நடவு செய்ய 60 லட்சம் கன்றுகள் தேவை. இதற்குக் குறுகிய கால பயிரான வி.ஆர்.ஐ. 3 ரக முந்திரி கன்றுகளை விருத்தாசலம் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்வது குறித்து விஞ்ஞானிகளுடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், 1 லட்சம் பலா கன்றுகளை பாலூர் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.  பேராசிரியர் கலைச்செல்வன், ஜெயராஜ், ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயல் : கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு

             "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று அக்கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் தெரிவித்தார்.  
 
இதுகுறித்து எஸ்.ஆர்.எம். கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர்  கூறியது: 
 
              இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்கள் நடத்தி, கட்சியின் மாவட்ட அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. கட்சியின் நிர்வாக வசதிக்காக 71 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னைக்காக கேரள அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கட்சி சார்பில், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாரி நற்பணி மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  கட்டண விலக்கு: "தானே' புயல் பாதித்த பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.  
 
              புயலால் பாதிப்படைந்த பகுதி விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை அதிகமாக வழங்கவேண்டும்.  புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும். அதற்கு முன்னோடியாக எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகளில் பயிலும் கடலூர் மாவட்ட மாணவர்கள் 328 பேருக்கு 5 ஆண்டுகளுக்கான ரூ.7 கோடி கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.  மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய கூடங்குளம் அணு மின்நிலையம் செயல்படவேண்டும். அணு மின்நிலையம் தொடர்பான வீண் பயத்தை விடவேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார் பாரிவேந்தர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 207 விவசாயிகளுக்கு 6,02,412 ரூபாய் முதற்கட்டமாக நிவாரணத் தொகை


கடலூர் : 

              கடலூரில், தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர். மாவட்டத்தில் புயலால் நெல், கரும்பு, மணிலா, உளுந்து, பருத்தி, உள்ளிட்ட விவசாய பயிர்களும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, வாழை, மரவள்ளி கிழங்கு, வெற்றிலை, மஞ்சள், தென்னை, பனை ஆகிய தோட்டக்கலை பயிர்கள் உட்பட மொத்தம் 3,26,957 ஏக்கர் பரப்பில் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

            பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலமாக 1,34, 631 பேருக்கும், தோட்டக்கலைத் துறை மூலமாக 52,470 பேருக்கும் நிவாரணத் தொகையாக முதல்வர் ஜெ., 120.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்தொகை 166 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

             முதற்கட்டமாக கடலூரில் கோண்டூர், உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த 207 விவசாயிகளுக்கு 6,02,412 ரூபாய் நிவாரணத் தொகையை மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஊரக தொழில் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சம்பத், கூட்டுறவுத் துறை செல்லூர் ராஜூ ஆகியோர் வழங்கினர். கலெக்டர் அமுதவல்லி, முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், வங்கியியல் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 















Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior