உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 14, 2012

தானே புயல் : கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு

             "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று அக்கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் தெரிவித்தார்.  
 
இதுகுறித்து எஸ்.ஆர்.எம். கல்லூரி வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர்  கூறியது: 
 
              இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்கள் நடத்தி, கட்சியின் மாவட்ட அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. கட்சியின் நிர்வாக வசதிக்காக 71 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னைக்காக கேரள அரசைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கட்சி சார்பில், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாரி நற்பணி மன்றம் சார்பில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  கட்டண விலக்கு: "தானே' புயல் பாதித்த பகுதிகளில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் செலவில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.  
 
              புயலால் பாதிப்படைந்த பகுதி விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகை அதிகமாக வழங்கவேண்டும்.  புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும். அதற்கு முன்னோடியாக எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகளில் பயிலும் கடலூர் மாவட்ட மாணவர்கள் 328 பேருக்கு 5 ஆண்டுகளுக்கான ரூ.7 கோடி கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.  மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய கூடங்குளம் அணு மின்நிலையம் செயல்படவேண்டும். அணு மின்நிலையம் தொடர்பான வீண் பயத்தை விடவேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றார் பாரிவேந்தர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior