உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 10, 2009

அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி

அக்டோபர், 09- 2009

கடலூர்:
    
        தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிக்கான இடைத்தேர்தல் 7-ந் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.

           கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் தமிழரசன் வெற்றி பெற்றுள்ளார். 

ஓட்டுகள் விவரம் வருமாறு:-

         தமிழரசன்-146 (தே.மு.தி.க.), மங்கையர்க் கரசி-124 (தி.மு.க.). 

லால்பேட்டை பேரூராட்சி
 
           லால்பேட்டை பேரூராட்சி 3-வது வார்டு கவுன் சிலர் பதவிக்கான தேர்தலில் த.மு.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். 

ஓட்டுகள் விவரம் வரமாறு:-
 
         யாசர் அரபாத்-102 (தே.மு.தி.க.), சிராஜுதீன்-85 (சுயே).
 
விருத்தாசலம்

              விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் காசிநாதன் 999 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மணிகண்டன் 876 ஓட்டுகள் பெற்றார்.
 
         இதேபோல் விருத்தாசலம் ஒன்றியம் எம்.புதூர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினர் தேர்த லில் 150 வாக்குகள் பெற்று முருகையனும், எம்.பரூர் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் முருகேசன் 325 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
          

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior