உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று கடலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீர குமார் கூறினார். மத்திய அரசின் சார்பில் சிதம்பரத்தில் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய டாக்டர் ஜெயவீர குமார் கூறுகையில், 

                    "கடலூர் மாவட்டத்தில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே இந்த நோய் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை" என்றார். பன்றிக்காய்ச்சல், காசநோய், எய்ட்ஸ், மலேரியா, யானைக்கால் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்துவதில் பள்ளி மாணவர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior