உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கடலூர் :

            தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபர் 7-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதியுடன் முடிவடைகிறது.  இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மற்ற காலி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

                கடலூர் மாவட்டத்தில் நல்லூர் ஒன்றியம் ஐவதுகுடி ஊராட்சி, பண்ருட்டி ஒன்றியம், தொளப்பாக்கம் ஊராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், சிலம்பிமங்கலம் ஊராட்சி, விருத்தாசலம் ஒன்றியம், எருமனூர் ஊராட்சி ஆகிய 4 ஊராட்சி தலைவர் பதவிக்கும், விருத்தாசலம் நகராட்சி 3-வது, அண்ணாமலை நகர் பேரூராட்சி 3-வது வார்டு, லால்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டு ஆகிய கவுன்சிலர் பதவிக்கும் மற்றும் கடலூர், கம்மாபுரம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, மங்களூர், நல்லூர், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், கீரப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.

                  தேர்தல் நடந்த அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குபதிவையொட்டி வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior