உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 14, 2009

சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு புகார்களை அனுப்பலாம்

கடலூர், நவ.11:

கடலூர் மாவட்டத்துக்கு விரைவில் வருகை தர இருக்கும் சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு புகார்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழு செயலாளர் செல்வராஜ் அண்மையõல் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவை மனுக்கள் குழு (2009-10) விரைவில் கடலூர் மாவட்டத்துக்கு வர இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தனி நபர்களோ, சங்கங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை அனுப்பலாம். மனுக்களை தமிழில் 5 நகல்கள் எடுத்து, மனுதாரரின் முகவரி மற்றும் கையெழுத்துடன், தலைவர் மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை- 600009 என்ற முகவரிக்கு நவம்பர் 29-க்குள் அனுப்பலாம்.
மனுக்கள் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்தவைகளாக இருக்கலாம். எந்த மனுவும் ஒரே ஒரு பிரச்னையை உள்ளடக்கியதாகவும் ஒரே ஒரு துறையை சேர்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
மனுக்கள் குழு கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும்போது மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆய்வுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மனுவில் உள்ள பொருள் குறித்து உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பின்னர் தனியாகத் தகவல் அனுப்பப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior