உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 14, 2009

மழை பாதிப்பு: நகர்மன்ற தலைவர் ஆய்வு

கடலூர்,நவ.11:

கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, கடலூர் நகர்மன்றத் தலைவர் து.தங்கராசு புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூரிóல கடந்த 10 நாள்களாக பெய்த அடை மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குழந்தை காலனி பகுதியில் 45 குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நகர்மன்றத் தலைவர் தங்கராசு, துணைத் தலைவர் தாமரைச் செல்வன், கடலூர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
தேங்கி நின்ற மழைநீர் வடிய உடனே நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேணடும் என்று தாமரைச்செல்வன் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior