உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 23, 2010

கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் கலைஞர் வீட்டு வசதி திட்டப் பணிகள்

கடலூர்:

              கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.

                     கடலூர் ஒன்றியம் வழிசோதனைப் பாளையம் கிராமத்தில் வீடுகள் கட்டும் பணியை, மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில்,  முதல்வரின் சிறப்புத் திட்டமான வீடுகள் வழங்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 683 கிராமங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளன. கடலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 51 ஊராட்சிகளில் 2,435 வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் கட்டடப்படும் வீடுகள் அனைத்தும் தரமானதாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார் என செய்திக் குறிப்பு கூறுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior