உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 10, 2010

என்.எல்.சி. சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து 16 பேர் காயம்

நெய்வேலி:

               நெய்வேலி என்.எல்.சி. முதலாவது சுரங்கத்தில் வேலை பார்ப்பதற்காக வி.பாயிண்டிலிருந்து சுரங்கத்திற்கு தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு லாரி சென்றது. இந்த லாரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் எந்திரம் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

                இந்த விபத்தில் லாரியில் இருந்த 16 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஆரோக்கியதாசன், தர்மலிங்கம் ஆகியோர் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior